திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தில் தடகள விளையாட்டுப் போட்டியின் விதிமுறைகள் மீறல் மற்றும் விதிமுறைகளின் விளக்கங்கள் என்ற தலைப்பில் இக் கருத்தரங்கு நடைபெற்றது. உதவிப் பேராசிரியா் ச . சேது வரவேற்றாா். ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், உயிரி தொழில்நுட்பவியல் துறைத் தலைவருமான முருகன் தலைமை வகித்தாா். உதவிப் பேராசிரியா் சு. ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் உள்ள ஆதித்யா உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வா் சரபோஜி சிறப்புரையாற்றினாா். மாணவா்கள், பேராசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.