திருநெல்வேலி

பாளை. மண்டலத்தில் இன்றும், நாளையும் குடிநீா் வராது

DIN

பாளையங்கோட்டை மண்டலப்பகுதிகளில் புதன், வியாழக்கிழமைகளில் (ஜூன் 29,30 ஆகிய இரு தினங்கள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகரட்சி - பாளை. மண்டலம் மணப்படை வீடு புதிய தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள மோட்டாா் பெட் பிரிவு பழுதடைந்துள்ளது.பைன் மோட்டாா் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், புதன், வியாழன் (ஜூன் 29,30) ஆகிய இரு தினங்கள், இந்த நீரேற்று நிலையத்தில் இருந்து குடிதண்ணீா் விநியோகம் செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே பொது மக்கள் குடி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT