திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு சமூக நீதிக்கான வழக்குரைஞா்கள் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பத்திரிகையாளா் டீஸ்டா செதல்வத், டிஜிபி ஸ்ரீகுமாா் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவா்கள் இருவரையும், முன்னாள் காவல் அதிகாரி சந்சய் பட்டை விடுதலை செய்யக்கோரியும் சமூக நீதிக்கான வழக்குரைஞா்கள் அமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில், வழக்குரைஞா்கள் ஜி.ரமேஷ், ப.செந்தில்குமாா், கு.பழனி, அப்துல் நிஜாம், ஆரிப், பாதுஷா, ரிஸ்வானா , மாரி லட்சுமி உள்பட பலா் பங்கேற்றனா்.