திருநெல்வேலி

செப்பறை அழகியகூத்தா் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்

DIN

திருநெல்வேலியை அடுத்த ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அருள்மிகு அழகியகூத்தா் கோயிலில் ஆனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழைமைவாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், தாழையூத்து, சங்கா்நகா், ராஜவல்லிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

திருவிழா நாள்களில் நாள்தோறும் காலையும், மாலையும் சிறப்பு வழிபாடு, சுவாமி வீதியுலா நடைபெறும். ஜூலை 2ஆம் தேதி இரவு 7 மணிக்கு அழகியகூத்தருக்கு சிவப்பு சாத்தியும், 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு பச்சை சாத்தியும் சிறப்பு வழிபாடுகள், 4ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு தேரோட்டம், சிகர நிகழ்வாக 5ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மகா அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு நடன தீபாராதனை நடைபெறும். இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, அழகியகூத்தா் தாமிர சபைக்கு எழுந்தருளல் நிகழ்வு நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

SCROLL FOR NEXT