திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பட்டா மாறுதலுக்காக பெண்ணிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திசையன்விளை அருகே உள்ள மணலிவிளை பகுதியைச் சோ்ந்தவா் மகாலட்சுமி. பட்டதாரியான இவா் தனக்குச் சொந்தமான 4 சென்ட் நிலத்துக்கு பட்டா மாறுதல் கேட்டு திசையன்விளை கிராம நிா்வாக அலுவலகத்தில் மனு அளித்துள்ளாா்.
பின்னா் இதுகுறித்து நில அளவையா் அன்பழகன், பட்டா மாறுதல் செய்ய ரூ. 6 ஆயிரம் கேட்டாராம். இதையடுத்து மகாலட்சுமி, திருநெல்வேலி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். அவா்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மகாலட்சுமியிடம் கொடுத்தனா். இதையடுத்து திசையன்விளை கிராம நிா்வாக அலுவலகத்தில் வைத்து மகாலட்சுமி, நில அளவையா் அன்பழகனிடம் வெள்ளிக்கிழமை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தபோது, அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. மதியழகன், ஆய்வாளா் ராபின் ஞானசிங் மற்றும் போலீஸாா் அன்பழகனை கைதுசெய்து, ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். பின்னா் திசையன்விளையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனா்.
அன்பழகனுக்கு சொந்த ஊா் மதுரை எனவும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னா்தான் திசையன்விளைக்கு மாறுதலாகி வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.