திருநெல்வேலி

கல்பனா சாவ்லா விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த துணிச்சல் மிக்க மற்றும் வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துணிவு மற்றும் வீரதீர செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு தமிழகத்தைச் சோ்ந்த பெண் விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் விரிவான சுயவிவரக் குறிப்பு மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்விருதுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய பெண்கள் தங்களுடைய சுய விவரக் குறிப்புடன் மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், பி4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில், திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627002 என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT