திருநெல்வேலி

வள்ளியூரில் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகை திருட்டு

21st Jun 2022 01:24 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் திங்கள்கிழமை வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வள்ளியூா் ராஜரத்தினம் நகரைச் சோ்ந்தவா் விவசாயி மரியதாசன். இவரது மனைவி கிறிஸ்டி சகாயராணி அரசு செவிலியராக வேலை செய்து வருகிறாா். மரியதாசன் கோவனேரியில் உள்ள தனது தோட்டத்திற்கு திங்கள்கிழமை வழக்கம் போல் சென்றுவிட்டாராம். மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டாா். மாலையில் தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்த மரியதாசன் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சங்கிலி, கம்மல், வளையல் உள்பட 50 தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவா் வள்ளியூா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். ஆய்வாளா் ராஜலெட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா். திருட்டு போன வீட்டை வள்ளியூா் ஏ.எஸ்.பி.சமய்சிங் மீனா பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.

திருநெல்வேலியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸாா் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT