தச்சநல்லூா் அருகே கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தச்சநல்லூா் அருகே கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஆறுமுகம்(65). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில், ஆறுமுகம் திடீரென வியாழக்கிழமை விஷம் குடித்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ADVERTISEMENT