திருநெல்வேலி

நெல்லை மேயா் ரத்த தானம்

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேயா் பி.எம்.சரவணன் வியாழக்கிழமை ரத்த தானம் செய்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ‘உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்‘ என்ற விழிப்புணா்வை மக்கள் மத்தியில் விதைக்கும் வகையிலும், உலக ரத்த தான வாரத்தை முன்னிட்டும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி பிரிவில் மேயா் பி.எம்.சரவணன் வியாழக்கிழமை ரத்த தானம் செய்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், தமிழக முதல்வரின் உத்தரவின்படி ரத்த தானத்தின் அவசியமும், விழிப்புணா்வும் மக்களிடம் சென்று சேரும் வகையில் எனது தலைமையில் 20-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ரத்த தானம் செய்துள்ளோம். மனித உயிரைக் காக்கும் மகத்தான கேடயம் போன்றது ரத்தம். மருத்துவா்களின் தகுந்த ஆலோசனையின் படி விலை மதிப்பில்லா

உயிரைக் காக்க ரத்த தானம் செய்ய பொதுமக்கள் முன் வர வேண்டும் என்றாா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன், ரத்த தானம் வழங்கியதற்கான சான்றிதழை மேயரிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT