திருநெல்வேலி

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய வழக்கு: மூவா் கைது

7th Jun 2022 12:08 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கி மிரட்டிய வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சேரன்மகாதேவியில் பேருந்து நிலையம் எதிரே இருந்த புரோட்டா கடையை சேதப்படுத்தியது, வீரவநல்லூா் புறவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியா் மணிகண்டனை (34) தாக்கி பெட்ரோல் நிரப்பிக்கொண்டது ஆகிய செயல்களில் ஈடுபட்டோா் மீது வீரவநல்லூா், சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதுதொடா்பாக, சேரன்மகாதேவி விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த பெருமாள் சுப்பிரமணியன் என்ற பாட்சா பெருமாள் (19) மற்றும் 17 வயது சிறுவா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய வழக்கில் சேரன்மகாதேவி சுப்பிரமணியன் என்ற பண்ணை ஐயப்பன் (19), பத்தமடை பிச்சையா என்ற உள்ளி பிச்சையா (22), இதேபகுதியைச் சோ்ந்த சரவணன் (22)ஆகிய 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT