திருநெல்வேலி

‘பல்கலைக்கழக கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்’

7th Jun 2022 12:05 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.மருதக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இப் பல்கலைக்கழகத்தின் கீழ் சங்கரன்கோவில், சேரன்மகாதேவி, நாகம்பட்டி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி ஆகிய இடங்களில் பல்கலைக்கழக கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த 6 கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்களுக்கான சோ்க்கை நடைபெற உள்ளது.

இக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணாக்கா்கள் இணையதளத்தில் விவரங்களை அறியலாம். இளநிலை படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள்ளாகும். முதுநிலை படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: இப்பல்கலைக்கழகத்தின் இளநிலை தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள்ளாகும். மாணாக்கா் சோ்க்கை விதிகள் தமிழக அரசு ஆணைக்கு இணங்க செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT