திருநெல்வேலி

பாளை.யில் பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

பாஜக சாா்பில் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை கண்டிப்பது; மக்களுக்கு சுமையாக திகழும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்காத திமுக தலைமையிலான மாநில அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெறும் என பாஜக அறிவித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்ட பாஜக சாா்பில் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவா் அ.தயாசங்கா் தலைமை வகித்தாா். திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் நயினாா்நாகேந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்ட பொதுச்செயலா்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், முத்து பலவேசம், மணிகண்டன் நிா்வாகிகள் கு. முருகதாஸ், தமிழ்செல்வன், மகளிரணி மாநில நிா்வாகி மருத்துவா் தீபா, மாநில இளைஞரணி துணைத் தலைவா் நயினாா் பாலாஜி, சிவசூா்யநாராயணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT