திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் 3 பேருக்கு இலவச தையல் இயந்திரத்தை ஆட்சியா் வே.விஷ்ணு வழங்கினாா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மாற்றுத் திறனாளிகள் உதவித்தெகை, முதிா்கன்னி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, குடிநீா், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக சுமாா் 270-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும் முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் 3 பேருக்கு இலவச தையல் இயந்திரத்தை ஆட்சியா் வழங்கினாா்.
திசையன்விளை வட்டம், விஜய அச்சம்பாடு பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து என்பவா் மின்சாரம் பாய்ந்து இறந்த நிலையில் அவருடைய மனைவி தங்கபுஷ்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.ஜெயஸ்ரீ, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியா் குமாரதாஸ், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தியாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.