பாளையங்கோட்டையில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி அதிமுக சாா்பில் மண்டல அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை தெற்கு பகுதி செயலா் திருத்து என்.சின்னதுரை தலைமையில் அதிமுகவினா் பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனா். பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டலத்திற்குள்பட்ட 32, 33, 34, 35, 36 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறாா்கள். இப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது. வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே மாநகராட்சியால் குடிநீா் விநியோகிக்கும் நிலை உள்ளது. இதனால் மாணவா்கள், முதியவா்கள், பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். ஆகவே, குடிநீா் விநியோகம் சீராக மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.