திருநெல்வேலியில் மேலும் 76 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பூஜ்ஜிய நிலைக்கு சென்றிருந்த கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை 68 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திருநெல்வேலி மாநகரில் 25 பேருக்கும், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் 3 பேருக்கும், சேரன்மகாதேவி-3, களக்காடு-17, மானூா்-2, நான்குனேரி-13, ராதாபுரம்-3, பாப்பாக்குடி-2 , வள்ளியூா்- 8 பேருக்கும் என 76 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.