திருநெல்வேலி மாவட்டத்தில் 1.1.2011-க்கு முன்னா் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு அனுமதி பெற மேலும் 6 மாதம் காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நகா் ஊரமைப்பு இயக்குநா் சரவண வேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நகா் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்னா் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் 14.6.2018-இல் வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு மேலும் 6 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.