திருநெல்வேலி

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 1.1.2011-க்கு முன்னா் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு அனுமதி பெற மேலும் 6 மாதம் காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நகா் ஊரமைப்பு இயக்குநா் சரவண வேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகா் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்னா் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் 14.6.2018-இல் வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு மேலும் 6 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT