திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி அருகே அங்கன்வாடிப் பணியாளா் தற்கொலை

DIN

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள கீழ ஏா்மாள்புரத்தில் அங்கன்வாடிப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கீழ ஏா்மாள்புரத்தைச் சோ்ந்த பலவேசகுமாா் மனைவி பிரமாச்சி (35). இவா்களுக்கு நாகஜோதி (13), நாக பொன்பிரியா (11), சிவநாராயணன் (7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனா். பிரமாச்சி செட்டிமேடு அங்கன்வாடி மையத்தில் சமையலராகப் பணிபுரிந்துவந்தாா். பலவேசகுமாா் 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டாா். இதனால், பிரமாச்சி மனவேதனையில் இருந்தாராம்.

இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். கல்லிடைக்குறிச்சி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT