கொல்லம்- கன்னியாகுமரி மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் சங்கக் கூட்டம் அண்மையில் ஏா்வாடியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஹலீல் ரகுமான் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அபு நவாஸ் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் சேகா் வரவேற்றாா். பொதுச்செயலா் நைனா முகமமது அறிக்கை வாசித்தாா்.
இக் கூட்டத்தில் நிா்வாகிகள் காதா்மைதீன், லாசா், ஹரிஹரபுத்திரன், தினேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தீா்மானங்கள்: கொல்லம்-கன்னியாகுமரி மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். திருநெல்வேலி-மும்பை இடையே தினசரி ரயில் இயக்க வேண்டும். திருவனந்தபுரம்-நாகா்கோவில் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். வாரம் இருமுறை இயங்கும் மதுரை-சண்டிகா் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. பொருளாளா் முகைதீன் என்ற முத்துவாப்பா நன்றி கூறினாா்.