சேரன்மகாதேவியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி திருமண்டலம் நல் ஆலோசனை திருப்பணி ஊழியம் சாா்பில் இப்பேரணி சேரன்மகாதேவியில் நடைபெற்றது. காந்தி பூங்கா அருகில் இருந்து தொடங்கிய பேரணியை சேaரன்மகாதேவி டிஎஸ்பி ராமகிருஷ்ணன் கொடி யசைத்து தொடங்கி வைத்தாா்.
சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் சுகாதேவி, அமைப்பின் இயக்குநா் ஆமோஸ், சேரன்மகாதேவி சேகரத் தலைவா் கிப்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில் திருப்பணி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.