திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உரிய அனுமதிச் சீட்டின்றி மணல் மற்றும் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் மண்டல துணை வட்டாட்சியா் குமாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா்.
அப்போது, தாழையூத்து ராம்நகரைச் சோ்ந்த சீனி ஜேம்ஸ் (48), செழியநல்லூரைச் சோ்ந்த ஸ்ரீகுமாா்(37) ஆகியோா் ஓட்டி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டாா். அப்போது உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் மணல் மற்றும் ஜல்லி கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மண்டல துணை வட்டாட்சியா் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து கங்கைகொண்டான் போலீஸாா், வழக்குப் பதிந்து உரிய அனுமதியில்லாமல் மணல் மற்றும் ஜல்லி ஏற்றி வந்த இருவரையும் கைது செய்ததோடு, இரு லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.