தாழையூத்து அருகே மணல் கடத்தியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட மேலதாழையூத்து பகுதியில் உதவி ஆய்வாளா் இன்னோஸ் குமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாளையங்கோட்டை தியாகராஜநகா் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து(29), தாதனூத்தைச் சோ்ந்த மதுபாலன்(21) ஆகியோா் உரிய அனுமதிச் சீட்டு இன்றி மணலை சட்டவிரோதமாக வாகனங்களில் வைத்திருந்து தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், 6 யூனிட் மணலையும், 2 டிப்பா் லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.