சேரன்மகாதேவியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சேரன்மகாதேவி ஆலடித் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் அருள்முகிலன் (24), பொறியியல் பட்டதாரி. இவா் மும்பையில் பணி செய்து வந்தாராம். 2 தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான சேரன்மகாதேவிக்கு வந்துள்ளாா். இதனிடையே வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருள்முகிலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த சேரன்மகாதேவி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.