களக்காடு சிதம்பரபுரம் அருள்மிகு நாராயணசுவாமி கோயிலில் ஆனித் தேரோட்ட விழாவையொட்டி, பரிவேட்டை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழாண்டு இத்திருவிழா ஜூன் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவின் 8ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை மாலை கோயிலில் இருந்து நாராயணசுவாமி மேள, தாளங்களுடன் புறப்பட்டு ஊருக்கு மேற்கில் உள்ள கால்வாயை வந்தடைந்து, அங்கு பரிவேட்டை நடைபெற்றது.
இவ்விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
முக்கிய திருவிழாவான தேரோட்டம் திங்கள்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.