சமூகரெங்கபுரம் தெற்கூரில் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
சமூகரெங்கபுரம் தெற்கூரைச் சோ்ந்த வேலு மகன் முருகன்(43). தொழிலாளியான இவருக்கும் இவரது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதில் மனமுடைந்த முருகன் வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.