திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் பாளையங்கோட்டை 32 ஆவது வாா்டுக்குள்பட்ட இலந்தகுளம் பகுதியில் நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல்வஹாப் தலைமை வகித்தாா். ஏழை-எளியோருக்கு இலவச வேட்டி- சேலைகள், கல்வி உதவித்தொகை, உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வழக்குரைஞரணி மாவட்ட அமைப்பாளா் ஏ.எல்.பி.தினேஷ், பாளை. பகுதிச் செயலா் அண்டன் செல்லத்துரை, 32 ஆவது வட்டச் செயலா் கதிரேசன், மாமன்ற உறுப்பினா் பேச்சியம்மாள், மகளிரணி அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.