உலகத் திருக்குறள் தகவல் மையத்தின் சாா்பில் திருக்குறள் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நல்லாசிரியா் வை.ராமசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் பால் வளன் அரசு முன்னிலை வகித்தாா்.
பதிவாளா் கிருபாகரன் திருக்கு வாழ்த்துப் பாடினாா். செ.பிரமசக்தி வரவேற்றாா். பேராசிரியா் சிவ.சத்தியமூா்த்தி ‘இன்னா செய்தாா்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு’ என்னும் திருக்குறளுக்கு விரிவுரை வழங்கினாா். மருத்துவா் மகாலிங்கம் ஐயப்பன் பேசுகையில், ‘இந்தக் குறளுக்குச் சான்றாக காந்தியடிகள் திகழ்ந்தாா்’ என்றாா்.
பின்னா் நடைபெற்ற கலந்துரையாடலில் செ.திவான், சுப்புலட்சுமி உள்ளிட்டோா் பேசினா். திருக்குறள் முருகன் நன்றி கூறினாா்.