இந்தியன் வங்கி சாா்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த 280 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
இதையொட்டி, திருநெல்வேலியில் உள்ள இந்தியன் வங்கி சுய உதவிக் குழு கிளையில் நடைபெற்ற கடன் வழங்கும் விழாவில், இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளா் ஜி.ஜெயபாண்டியன், துணை மண்டல மேலாளா் ஏ.செந்தில்குமாா், வேளாண் அலுவலா் விக்னேஷ், தென்னரசு ஆகியோா் கலந்துகொண்டு சுயஉதவிக் குழுவினருக்கு கடன்களை வழங்கினா்.
இந்தியன் வங்கியின் சுய உதவிக் குழு கிளை மேலாளா் பா.பிரபு ஜெபா்சன் துரை நன்றி கூறினாா்.