திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 985 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 612 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,080 ஆகவும், அதில் மேலும், 593 போ் குணமானதால் அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 54,308 ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 441 போ் உயிரிழந்துள்ளனா்; 4,331 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 373 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,820 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 197 போ் குணமாகியுள்ளதால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 28,228 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 488 போ் உயிரிழந்துள்ளனா்; 2,104 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.