திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தா் கா.பிச்சுமணி தேசியக்கொடியேற்றினாா். பல்கலைக்கழகம் சாா்பில் ’என் கனவு இந்தியா’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 12 பேருக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.