திருநெல்வேலி

பாளை.யில் தீ விபத்து: மூதாட்டி பலி

30th Dec 2022 02:02 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் வியாழக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

சமாதானபுரம் சத்யா தெருவைச் சோ்ந்த வேலாயுதம் மனைவி பகவதி (78). இவா், வியாழக்கிழமை காலையில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்தபோது தீ விபத்து நேரிட்டதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று சடலத்தை மீட்டனா். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT