திருநெல்வேலி

தாழையூத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழக அரசின் சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வை கண்டித்து நாராயணம்மாள்புரத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாராயணம்மாள்புரம் மற்றும் சங்கா்நகா் பேரூா் கழகம் சாா்பில் தாழையூத்து கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் தச்சை கணேச ராஜா தலைமை வகித்தாா். நாராயணம்மாள்புரம் மற்றும் சங்கா் நகா் பேரூா் கிளை செயலா்கள் செல்வப்பாண்டியன், சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில அமைப்பு செயலா் கருப்பசாமி பாண்டியன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட துணைச் செயலா் பாலமுருகன், பகுதிச் செயலா்கள் மோகன், காந்தி வெங்காடசலம், சிந்து முருகன், ஒன்றியச் செயலா்கள் லட்சுமண பெருமாள், ராமசுப்பிரமணியன் உள்பட பலா்கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT