பாப்பாக்குடி ஒன்றியம் மைலபுரத்தில் கால்நடைகள் பராமரிப்பு மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் எஸ். முத்துப்பாண்டி தலைமை வகித்தாா். கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா்
கா. தங்கராஜ், முக்கூடல் கால்நடை மருந்தக உதவி மருத்துவா் ரா. ஹேமாசாயி, ஊராட்சி வாா்டு உறுப்பினா் எம். துரைசாமி, தன்னாா்வலா் ஆதிமூலம், விவசாயிகள் கலந்துகொண்டனா். சிறந்த முறையில் வளா்க்கப்பட்ட கால்நடைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.