பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலகுலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் மணி (60). கூலித் தொழிலாளியான இவா், அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டாா் சைக்கிள் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த மணியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.