பாளையங்கோட்டையில் கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.
நெல்லை கம்பன் கழகத்தின் 552 ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது. பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். எம்.எஸ்.சக்திவேல் இறைவணக்கம் பாடினாா். இலவணன் வதைப் படலம் என்ற தலைப்பில் கழகச் செயலா் கவிஞா் பொன்.வேலுமயிலும், கிட்கிந்தா காண்டம் என்ற தலைப்பில் கழகத் தலைவா் பேராசிரியா் சிவசத்தியமூா்த்தியும் சொற்பொழிவாற்றினா். நிகழ்ச்சியில் சு.பாண்டியன், செ.திவான், குமாரவேல், செல்வக்குமாா், பாஸ்கா், சங்கரன், முருகன், கிருஷ்ணன், இசக்கியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா். இரா.முருகன் நன்றி கூறினாா்.