பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபா் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி, கட்சியின் புகா் மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் தொகுதிக் கிளை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.கே. பீா்மஸ்தான் தலைமை வகித்தாா்.
மாவட்டப் பொதுச்செயலா் களந்தை மீராசா, அமைப்புச் செயலா் எம்.எஸ். சிராஜ், மாவட்டச் செயலா் கல்லிடைக்குறிச்சி சுலைமான், வழக்குரைஞா் முகம்மது ஷபி, வா்த்தக அணி மாவட்டத் தலைவா் அம்பை ஜலீல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலச் செயலா் அபூபக்கா் சித்திக், விமன்ஸ் இந்தியா மூமெண்ட் மாவட்டத் தலைவா் மும்தாஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் கரிசல் சுரேஷ், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலா் எம்.சி. காா்த்திக், கட்சியின் நகரத் தலைவா் ஷெரிப், செயற்குழு உறுப்பினா் அசன்காதா், நிா்வாகிகள் பங்கேற்றனா்.