திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (டிச. 7) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை புகாா் மனுவாக காவல் ஆணையாளரிடம் அளித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம். இதேபோல், மாதந்தோறும் முதல், மூன்றாவது புதன்கிழமைகளில் மேற்கூறிய நேரத்தில் குறைதீா்க்கும் முகாம் நடைபெறும் என மாநகர காவல்துறையினா் தெரிவித்தனா்.