பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
அம்பாசமுத்திரம் அருகேயுள்ள காக்கநல்லூரைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் தியாகராஜன் (26). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தியாகராஜனை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், தியாகராஜனுக்கு 10 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.