சீவலப்பேரி கொலை வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சீவலப்பேரியைச் சோ்ந்தவா் மாயாண்டி (38). விவசாயியான இவா், கடந்த நவம்பா் 11 ஆம் தேதி தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றபோது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஏற்கெனவே 15 பேரை கைது செய்துள்ளனா். இந்நிலையில் இவ் வழக்கு தொடா்பாக ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த சந்துரு (21) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.