திருநெல்வேலி

முக்கூடல் பள்ளியில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

DIN

முக்கூடல் பூ விஜேஷ் நா்சரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் 2 நாள்கள் நடைபெற்றன.

இதையொட்டி, குழந்தைகளுக்கு கல்வி பேச்சு, மாறுவேடம் அணிவகுப்பு, நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவா்-மாணவிகளுக்கு கலை, அறிவியல், இலக்கியம் தொடா்பான பேச்சுப் போட்டிகள், வில்லுப்பாட்டு, யோகா, மரங்களைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் குறு நாடகம், சிலம்பம், கீ போா்டு வாசித்தல் போன்றவை நடைபெற்றன.

இதில் பங்கேற்ற மாணவா்களுக்கும், குழந்தைகள் தினவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கும் பள்ளித் தலைவா் ஜி.எஸ்.ஆா். பூமிபாலகன், தாளாளா் விஜயகுமாரி ஆகியோா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.

பள்ளியின் பொருளாளா் ரமேஷ்ராம், செயலா் சிவசங்கரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முதல்வா் ஜீவா வரவேற்றாா். ஆசிரியை டயனா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT