திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வரும் 6-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மின் வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ்.குருசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
அதன்படி, வரும் 6-ஆம் தேதி திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 9-ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 13-ஆம் தேதி வள்ளியூா் கோட்ட அலுவலகத்திலும், 16-ஆம் தேதி திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 20-ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 23-ஆம் தேதி கடையநல்லூா் கோட்ட அலுவலகத்திலும், 27-ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் பகல் 11 மணிக்கு குறைதீா் கூட்டம் நடைபெறும்.