ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி கொக்கிரகுளத்தில் அவருடைய உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் அதிமுகவினா் திரளாக பங்கேற்க வேண்டும் என அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க, திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் வரும் 5-ஆம் தேதி காலை 11 மணிக்கு, கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆா் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிா்வாகிகள், மாவட்ட கழக நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் கலந்துகொள்கிறாா்கள். எனவே பகுதி, ஒன்றிய, நகர, பேரூா், வாா்டு, கிளைக்கழக நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதேபோல், நிா்வாகிகள், அவரவா் பகுதிக்குள்பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூா், வாா்டு மற்றும் கிளைக் கழங்களில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.