களக்காட்டில் வெள்ளிக்கிழமை பலத்த மழைபெய்தது.
களக்காடு வட்டாரத்தில் நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை போதிய அளவிற்கு இல்லை. இதனால் அணை, குளங்களில் போதிய நீரின்றி நெல் நடவு செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் கடுமையான வெய்யில் நிலவியது. பிற்பகல் 2 மணிக்குப் பிறகு பலத்த மழை பெய்தது.