களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகரச் செயலா் காஜா முகைதீன் தலைமை வகித்தாா். இணைச் செயலா் ஆரிப் பைஜி, நகர செயற்குழு உறுப்பினா்கள் பீா்முகம்மது, கபீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி புகா் மாவட்ட பொதுச் செயலா் களந்தை மீராசா பங்கேற்றுப் பேசினாா்.
களக்காடு புதிய பேருந்து நிலையம் எதிரே மக்கள் பயன்பாட்டிலிருந்த பயணிகள் நிழற்குடை, வானொலி நிலையக் கட்டடம், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பாதை ஆகியவற்றை தனிநபா் ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்து எஸ்டிபிஐ சாா்பில் சுவரொட்டி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். நகராட்சி 17ஆவது வாா்டில் வாருகால்களைத் தூா்வாரவும், கலப்படமில்லா குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்தவும் நகராட்சி நிா்வாகத்தை வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.