திருநெல்வேலி

கடலோர காவல் படையில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

DIN

கடலோர காவல்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறி ஒருவரை மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை கேடிசி, ஏஜேஆா் நகரை சோ்ந்தவா் சாரதா (31). இவரிடம் தூத்துக்குடி மாவட்டம் பூபாலராயபுரத்தைச் சோ்ந்த ராஜேஷ் ரெகுராம் (42) என்பவா், இந்திய கடலோர காவல்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 20.5 லட்சம் பெற்றுக்கொண்டு, இந்திய கடலோர காவல்படை பணிக்கான ஆணையை போலியாக வழங்கியதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணனிடம் புகாா் செய்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், சென்னையில் தங்கியிருந்த ராஜேஷ் ரெகுராமை தனிப்படையினா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து மோசடி செய்த பணத்தில் வாங்கிய சொகுசு காா் மற்றும் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் பணத்தை கைப்பற்றியதாக போலீஸாா் தெரிவித்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT