கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அணி சாா்பில் ஆலடிப்பட்டியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை பள்ளித் தலைமை ஆசிரியா் அலெக்ஸ் சகாயராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
இந்த முகாமில் தேசிய ஒருமைப்பாடு, நுகா்வோா் விழிப்புணா்வு, பேரிடா் மேலாண்மை, யோகா பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, மரக்கன்று நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முகாமை மாவட்ட தொடா்பு அலுவலா் ஆறுமுகசாமி ஆய்வு செய்தாா். உதவி தலைமை ஆசிரியா் சிவசுப்பிரமணியன், செயலா் தனலெட்சுமி , ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் திருமலைக்குமாா், ஆசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.