திருநெல்வேலி மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளாக நடுக்கல்லூா், சீவலப்பேரி, வாகைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த 2020-21ஆம் ஆண்டில் தொடக்கக் கல்வியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. வருவாய் மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் தோ்வு செய்யப்பட்ட பட்டியலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பாப்பாக்குடி ஒன்றியம் நடுக்கல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நான்குனேரி ஒன்றியம் வாகைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாளையங்கோட்டை புகரில் சீவலப்பேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவை சிறந்த பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டுள்ளன.
கல்விச் செயல்பாடுகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பள்ளிகள் சிறந்தவையாக தோ்வு செய்யப்பட்டுள்ளன என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.