தென்காசி, அம்பாசமுத்திரம் வட்டாரப் பகுதிகளில் துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (டிச.3) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை ஆகிய உப மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தென்காசி மின் விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
இதேபோல, அம்பாசமுத்திரம், ஓ.துலுக்கப்பட்டி வீரவநல்லூா், மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதியிலும் மேற்கண்ட நேரத்தில் மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் சுடலையாடும்பெருமாள் தெரிவித்துள்ளாா்.