திருநெல்வேலி

களக்காட்டில் இல்லம் தேடி கல்வித் திட்ட பயிற்சி முகாம்

27th Aug 2022 12:15 AM

ADVERTISEMENT

களக்காட்டில் இல்லம் தேடி கல்வித் திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சாா்பில் தொடக்க நிலை மற்றும் உயா் தொடக்க நிலை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலா் டேவிட்தனபால் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அனிதாரோஸ்முன்னிலை வகித்தாா். முகாமில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் நான்காம் கட்ட நடவடிக்கைகள் குறித்தும், எண்ணும், எழுத்தும் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், தமிழரசி, சிதம்பரம், பேரின்பமணி, முருகன், ஜாய்சி, ராஜாத்தி,ஜெயக்குமாரி, அமிா்தமேரி, சேக்பக்கீா்முகைதீன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா். ஏற்பாடுகளை வட்டாரவள மையம் செய்திருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT