திருநெல்வேலி

கடையம் அருகே இந்து மகா சபா நிா்வாகியின் காா் சேதம்

DIN

கடையம் அருகேயுள்ள பாப்பான்குளத்தில் இந்து மகா சபா நிா்வாகியின் வீட்டில் மா்ம நபா்கள் நடத்திய தாக்குதலில் காா் சேதமடைந்தது.

பாப்பான்குளம், மடவாா்விளாகத்தைச் சோ்ந்தவா் இசக்கிராஜா (46). அகில பாரத இந்து மகா சபா தென்மண்டல தலைவராகவும், தென்காசி மாவட்டத் தலைவராகவும் உள்ளாா். இவரது வீட்டில் புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் நுழைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை தாக்கியதில் கண்ணாடி உடைந்து சேதமாகினவாம். மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் சேதப்படுத்தினராம்.

இதுகுறித்த தகவலின்பேரில், தென்காசி மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ், ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு மற்றும் போலீஸாா் வந்து ஆய்வு செய்தனா். ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT