முக்கூடல் பூவிஜேஷ் மெட்ரிக் பள்ளியில் 19ஆவது விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக உடற்கல்வி- விளையாட்டுத் துறை தலைமைப் பொறுப்பாளா் ஆறுமுகம் தலைமை வகித்து கொடியேற்றினாா். பள்ளியின் நிறுவனா் ஜி.எஸ்.ஆா். பூமிபாலகன் சிறப்பு விருந்தினரை கெளரவித்தாா். தாளாளா் விஜயகுமாரி ஒலிம்பிக் தீபமேற்றினாா். முதல்வா் ஜீவா வரவேற்றாா். இதில், பேரூராட்சித் தலைவி லெ. ராதா, துணைத் தலைவா் இரா. லட்சுமணன், பொருளாளா் ரமேஷ்ராம், செயலா் சிவசங்கரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொறுப்பாசிரியா் உமா நன்றி கூறினாா்.